Tuesday, August 3, 2010

நீர் நிலை..!!?














பொன்னுக்காக
படையெடுத்தான்
பொருளுக்காக படையெடுத்தான்
மண்ணுக்கும் படையெடுத்தான் -ஏன்
பெண்ணுக்கும் படையெடுத்தான்

பின்னாளில் ஒரு போர் மூளும் - அங்கே
தண்ணீர்
தான் கூர் வாளும்

நீருக்காக
ஒரு மோதலேனில் - அது
பாருக்கே
பொறுப்பின்மைகான உச்ச உரைத்தல்

இருந்திருந்தால் வள்ளுவனும் சொல்லுவான்..

தண்ணீர்
பாம்புக்கு நஞ்சில்லை - நஞ்சுண்டு
தண்ணீரை
சந்தையாக்கும் மானுடருக்கு

நல்ல
குடிநீருக்காக பணமென்றால்
இல்லா குடிமக்கள் பிணமன்றோ..

நிறைந்த
நீர்நிலைகள் எங்கே
வறண்ட
நீரின் நிலைதான் இங்கே..

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.