நீர் நிலை..!!?
பொன்னுக்காக படையெடுத்தான்
பொருளுக்காக படையெடுத்தான்
மண்ணுக்கும் படையெடுத்தான் -ஏன்
பெண்ணுக்கும் படையெடுத்தான்
பின்னாளில் ஒரு போர் மூளும் - அங்கே
தண்ணீர் தான் கூர் வாளும்
நீருக்காக ஒரு மோதலேனில் - அது
பாருக்கே பொறுப்பின்மைகான உச்ச உரைத்தல்
இருந்திருந்தால் வள்ளுவனும் சொல்லுவான்..
தண்ணீர் பாம்புக்கு நஞ்சில்லை - நஞ்சுண்டு
தண்ணீரை சந்தையாக்கும் மானுடருக்கு
நல்ல குடிநீருக்காக பணமென்றால்
இல்லா குடிமக்கள் பிணமன்றோ..
நிறைந்த நீர்நிலைகள் எங்கே
வறண்ட நீரின் நிலைதான் இங்கே..
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.